பிரதம நீதியரசரை தரக்குறைவான வார்த்தையில் பேசினார்கள் - குற்றப்பிரேரணை சபாநாயகரிடம்

குற்றப்பிரேரணையை விசாரணைக்கு உட்படுத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தான் ஆஜரானபோது தன்னை அவமானப்படுத்திய அங்கத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

மேற்படி தெரிவுக்குழு அங்கத்தவர்களினால் பயன்படுத்தப்பட்ட சொற்களை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் சார்பில் நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனத்தினால் சபாநாயகருக்கு இந்த கடிதம் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தவர்களில் சிலர், 'பிஸ்ஸு கேணி' (பைத்தியக்காரி), 'அபி மே நோனவா மெத்தன தியாகென மடவனவா' (நாங்கள் இவருக்கு இவ்விடத்தில் வைத்து சேறு பூசுவோம்), 'பபா... நே... பபா ஹுகுங் (பாப்பா... இல்லை இல்லை கைக்குழந்தை), 'உசாவியே நாடகம் நடனவா' (நீதிமன்றத்தில் நாடகமாடுகிறார்), 'பபா வகே ஹிட்டியட பபா வகே வெட நே' (குழந்தை போல் இருந்தாலும் வேலைகள் குழந்தை போல் இல்லை) போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :