கல்விச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘Award of Excellence – 2026’




அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடளாவிய கௌரவிப்பு நிகழ்வுகள் ஆரம்பம்

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் ‘Award of Excellence – 2026 (Assad Inspire Award)’ நாடளாவிய கௌரவிப்பு நிகழ்வுத் தொடர் இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் Z-Score அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கௌரவிப்பு நிகழ்வுகள், மாணவர்களின் பெற்றோர்களின் பங்கேற்புடனும் சிறப்பான முறையிலும் நடைபெறவுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பல்வேறு தொடர் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்வியின் ஊடாக மாணவர்களை ஊக்குவித்து, எதிர்கால சந்ததியினரை அறிவும் ஆற்றலும் கொண்ட சமூகமாக உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இன, மத மற்றும் சமூக வேறுபாடுகளுக்கு அப்பால், கல்விச் சாதனைகளை மதித்து, திறமைகளை ஊக்குவிக்கும் பொதுவான நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆரம்ப காலம் முதல் கல்வித் துறைக்கு தொடர்ச்சியான முன்னுரிமையை வழங்கி வருகின்றது. குறிப்பாக, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்விசார் செயற்பாடுகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட நிகழ்வுகள் மூன்று மாவட்டங்களில்

‘Award of Excellence – 2026’ நாடளாவிய கௌரவிப்பு நிகழ்வுத் தொடரின் முதற்கட்டமாக, பின்வரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன:

செப்டெம்பர் 11 – மாலை: திருகோணமலை மாவட்டம்
செப்டெம்பர் 12 – மாலை: மட்டக்களப்பு மாவட்டம்
செப்டெம்பர் 13 – காலை: அம்பாறை மாவட்டம்


இந்நிகழ்வுகள் மூலம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி, அவற்றை சமூக மட்டத்தில் வெளிப்படுத்துவதுடன், ஏனைய மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஊக்கத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

மேலும், கல்விச் சாதனையாளர்களை சமூகத்தின் முன்மாதிரிகளாக முன்னிறுத்தி, அவர்களின் வெற்றிப் பயணத்தை ஏனைய மாணவர்களுக்கும் வழிகாட்டியாக மாற்றுவதற்கும் இந்நிகழ்வுகள் பங்களிக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரிப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
2026.08.31

www.acmc.lk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :