கலக்கமான இடைநிலை சூழ்நிலையில் ஒரு நாடாக கவனத்துடன் இதை எதிர்கொள்ள வேண்டும். NOAA (தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்) என்ற சர்வதேச அமைப்பு கிழக்கு திசையில் விலகும் வெப்ப நீர் ஓட்டம் காரணமாக கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிகமாக உயரும் என்று மிகவும் ஆபத்தான கணிப்புகளை வெளியிட்டுள்ளன. சூப்பர் எல் நினோ நிலைமை ஏற்படலாம் என்று 63% ஆன சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் கணிப்புகள் வெளிவருகின்றன. இதனால் கடுமையான வறட்சி காலம் அல்லது கூடிய மழைப்பொழிவு கொண்ட காலநிலை ஏற்பட்டு, கூடிய அவதானம் மிக்க காலநிலை சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயம், நீர், வனவிலங்கு-மனித மோதல் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளோடு, பின்னர் ஏற்படும் லா-நினா நிலைமையால் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்கு அப்பால் கனமழையையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் அச்சுறுத்தலாக இது அமையலாம். இதனால் நீர் பிரச்சினைகள் அதிகரித்து, மின் உற்பத்தி கூட பிரச்சினைக்குரிய விடயமாக மாறலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
ஆகவே, இதனை எதிர்கொள்ள பிரத்தியேகமான ஜனாதிபதி செயலணியொன்று அமைய வேண்டும். அரச கொள்கைகளுடன் இணைந்து, சவால்களை எதிர்நோக்கித் தீர்வுகளை தேடுவது இதன் ஊடாக நடக்க வேண்டும். இது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை நடக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment