விஜயத்தின் போது அமைச்சர் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் பண்ணையாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்கள் அனுபவித்த சேதங்கள், உடனடி தேவைகள் மற்றும் எதிர்கால குறைகள் தொடர்பாக விரிவாக கேட்டறிந்தார். பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதனுடன், எதிர்காலத்தில் கடற்றொழில் துறையை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் விவரித்தார். தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை விரைவில் மீண்டும் தொடங்கும் வகையில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அமைச்சர் தொடர்ந்து உடப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள கடலரிப்பு பிரச்சினையையும் பார்வையிட்டார். கடலரிப்பால் அப்பகுதி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்த அவர், இதனைத் தடுக்க அணை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், அதன் ஆரம்ப திட்டங்கள் மக்களிடம் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். கடலரிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் அச்சம் மற்றும் சேதங்களைப் புரிந்துகொண்டு அவற்றைத் தடுப்பதற்கான தீர்வுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.
புத்தளம் மக்களைச் சந்தித்தபோது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பேரிடரால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய எந்த நபரும் அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்தார். மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்பதே அரசாங்கத்தின் உறுதிப்பாடாகும். புத்தளத்தில் ஏற்பட்ட பேரழிவின் உண்மையான நிலைமை, அத்துடன் அதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவை இந்த அமைச்சரின் விஜயத்தால் தெளிவானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் கித்சிரி தர்மபிரிய உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
க.கிஷாந்தன்
ஊடக செயலாளர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு

0 comments :
Post a Comment