ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பூட்டான் நாட்டுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக இலங்கையைச் சேர்ந்த பாதில் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள UNDP வதிவிட அலுவலகத்தில் 13 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவமுள்ள இவர், சமீபத்தில் பேங்கொக்கை தளமாகக் கொண்ட UNDP ஆசியா-பசுபிக் பிராந்திய மையத்தில் (Bangkok Regional Hub) ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
பாதில் பாக்கீர் மாக்கார், அபிவிருத்தித் திட்டங்கள், சமூக முன்னேற்றம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பில் சிறப்பான பங்களிப்பைச் செய்த நிபுணராக மதிக்கப்படுகிறார்.
மேலும், இவர் இலங்கையின் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புத்திரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment