அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்மையில் சிரியாவில் சில ஷீயா பிரிவினர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பை நாடியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் அங்கு நுழைந்த சம்பவம் அதற்குச் சான்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில், ஷீயா ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் பெரும்பாலும் சுன்னா ஆதிக்கம் கொண்ட அரச ராணுவத்துக்கிடையேயான பிளவு காரணமாக ஹிஸ்புல்லா பலவீனமடைந்தது என்றும் அவர் கூறினார்.
யமனில் ஹூதி ஷீயாக்கள் மற்றும் சவூதி சுன்னிகள் இடையேயான தீராத பகையும், ஒருவரை ஒருவர் அழிக்க எதிர்பார்க்கும் மனநிலையும், முஸ்லிம் உலகின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. “சவூதி மீது இஸ்ரேல் தாக்கினால் அதனால் நாம் லாபம் அடையலாம் என ஷீயாக்கள் நினைக்கின்றனர்; ஹூதிகள் அழிக்கப்படின் நாம் சாந்தமாக இருக்கலாம் என சவூதிகள் கருதுகின்றனர்” என முபாறக் முப்தி சுட்டிக்காட்டினார்.
மேலும், “சவூதி அரசு எப்போது வீழ்ச்சி அடையும்? மக்கா, மதீனாவை எப்போது கைப்பற்றலாம்?” என்பது ஈரானின் திட்டமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், இலங்கையிலும் பிரிவினைகள் தீவிரமாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். “அரசாங்கம் தவ்ஹீத் அமைப்புகளை ஒழித்துவிட வேண்டும் என்பதே சூபிகள் எதிர்பார்ப்பு. இதன் விளைவாகவே 2019 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் தாமே முஸ்லிம்களை காட்டிக்கொடுத்தனர். அதேபோல், சூபிகள் எப்போது அழிவார்கள் என்பதே தவ்ஹீதுவாதிகளின் எண்ணம்” என அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் உலகம் இந்த நிலையை நீக்காமல், அரபு நாடுகள் இஸ்ரேலை தாக்கினால், இறுதியில் முஸ்லிம்களே இஸ்ரேலிடமும் அமெரிக்காவிடமும் அணுகி உம்ரா, ஹஜ் விசாக்களை வேண்டிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.
– ஸ்ரீலங்கா ஜம்மியதுல் உலமா கவுன்சில் தலைவர் முபாறக் முப்தி

0 comments :
Post a Comment