இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அதாஉத செனவிரத்ன அவர்களை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்கள் நேரில் சந்தித்து (2024.05.14) திருகோணமலை மாவட்டத்தில் வரோதயநகர் பகுதில் இயங்கிவருகின்ற இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் திருகோணமலை வளாகத்தின் பௌதீகவள அபிவிருத்தி மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் சந்தித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்திற்கு நேரில் களவிஜயம் செய்து வளாகத்தில் இருக்கின்ற பிரச்சினைகளையும் பார்வையிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களின் வேண்டுகோளினை செவிமடுத்த நிறைவேற்றுப் பணிப்பாளர் விரைவில் திருகோணமலை வளாகத்தினை பார்வையிட வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.இதில் நாடாளுமன்ற உறுப்பினரின் சதாத் கரீம் உம் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment