அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ரிஸ்லி முஸ்தபா!



டந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் புதல்வர் ரிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இன்று இணைந்து கொண்டார்.

ரிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சில் இணைந்து கொள்ளும் நிகழ்வு மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் 2024.05.31 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எல்.எம்.ஐயூப்கான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார். இவர்களுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் முன்னாள் பிரதி அப்துல்லாஹ் மஹ்ரூப் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
























 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :