மட்டக்களப்பு, புணானை ICST பல்கலைக்கழக பூங்காவில் மூவினத்திவரும் ஒன்றிணைந்த மகிழ்ச்சியான புதுவருட கொண்டாட்டம் இடம்பெற்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் புனித நோன்பு பெருநாள் விடுமுறைக்குப் பிறகு புதிய கல்வி ஆண்டை ஆரம்பித்து வைத்ததுடன் ,விரிவுரையாளர்கள்,உத்தியோஸ்தர்கள் , ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் மீண்டும் இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தலைவர் , துணைவேந்தர், உதவி துணை வேந்தர், பதிவாளர் என அனைவரும் பங்கேற்றனர்.
புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன், கற்றல் மற்றும் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் அனைவரும் மகிழ்வுற்றனர்.
0 comments :
Post a Comment