பெருமளவில் உல்லாச பயணிகள் சஞ்சரிக்கும் பொத்துவில் ,அறுகம்பே பிரதேசத்தில் திண்மக்கழிவுகள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
திகளவில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் சஞ்சரிக்கும் பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் ஹோட்டல்கள் நடாத்தும் சிலரின் முறையற்ற செயற்பாட்டினால் சர்வோதயபுரத்தின் வீதியோரங்களில் திண்மக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.
இதனை உட்கொள்வதற்காக இப்பிரதேசத்திற்குள் நுழையும் யானைகள் இப்பிரதேச மக்களின் பயன்தரும் மரங்களையும் உடமைகளையும் சேதமாக்கி வருகின்றது இதனோடு இப் பகுதியின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது எனவே இது குறித்து பொத்துவில் பிரதேச சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவம் கவனத்திற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்

அதுமட்டுமன்றி சுகாதார முறைகேடான இந்தச் செயற்பாட்டுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென பிரதேசவாசிகள் கேட்டுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :