அதிகளவில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் சஞ்சரிக்கும் பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் ஹோட்டல்கள் நடாத்தும் சிலரின் முறையற்ற செயற்பாட்டினால் சர்வோதயபுரத்தின் வீதியோரங்களில் திண்மக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.
இதனை உட்கொள்வதற்காக இப்பிரதேசத்திற்குள் நுழையும் யானைகள் இப்பிரதேச மக்களின் பயன்தரும் மரங்களையும் உடமைகளையும் சேதமாக்கி வருகின்றது இதனோடு இப் பகுதியின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது எனவே இது குறித்து பொத்துவில் பிரதேச சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவம் கவனத்திற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்
அதுமட்டுமன்றி சுகாதார முறைகேடான இந்தச் செயற்பாட்டுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென பிரதேசவாசிகள் கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment