இந்திய கேரள பஞ்சாயத்து முறையை பின்பற்றினால் சமத்துவம் பேணப்படும். சர்வதேச மகளிர் உரிமை ஆர்வலர் லோகேஸ்வரி காட்டம்.



வி.ரி. சகாதேவராஜா-
பெண்கள் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் சமத்துவமாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் .அதற்கு இந்தியாவில் கேரளா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பஞ்சாயத்து முறையை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் செயலாளரும் மனித அபிவிருத்தி தாபன நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமாகிய திருமதி எஸ். லோகேஷ்வரி தெரிவித்தார்.

மனித அபிவிருத்தி தாபனமும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியும் இணைந்து கல்முனை இஸ்லாமபாத் பொது கட்டிடத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வினை நேற்று முன்தினம் நடாத்தியது.

வேள்வி பெண்கள் அமைப்பின் உப தலைவியான எம். றிலீபா பேகம் தலைமைல் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் செயலாளரும் மனித அபிவிருத்தி தாபன நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமாகிய திருமதி சிவப்பிரகாசம் லோகேஷ்வரி கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்விக்கு மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தார்கள், அரசியல் செயற்பாட்டாளார்கள் , பெண்கள் அமைப்புகள், சிவில் அமைப்புகளின், இளைஞ்சர் அமைப்புகள் ஆகியவெற்றின் முக்கியஸ்தார்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :