ஒரு வார காலமாக மூடிக் கிடக்கும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை! அத்தியாவசிய சேவையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கலையரசன் எம்பி வேண்டுகோள்.



வி.ரி. சகாதேவராஜா-
டந்த ஒரு வார காலமாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்ப்பினால் மூடி கிடக்கின்றது.

இதனால் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் தமிழ்மக்கள் வைத்திய சேவையின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அவசர சிகிச்சைகளுக்காக அப்பிரதேச மக்கள் காலநேரபணம் செலவுசெய்து அக்கரைப்பற்று வைத்திய சாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.
ஒரு வாரத்துக்கு முன்பு மரதன் ஓடிய ஒரு மாணவனின் இறப்பைத் தொடர்ந்து அங்கு வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தெரிந்ததே. அதன் போது வைத்தியசாலை கண்ணாடிகள் பெயர் பலகைகள் உடைக்கப்பட்டதும் தெரிந்தததே.

இதனை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பின்மை என்று கூறி வைத்தியர்கள் வெளியேறினார்கள்.

அதனால் அன்றிலிருந்து இன்று(18) திங்கட்கிழமை வரை ஒரு வார காலமாக வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அங்கே எவ்விதமான வைத்திய சேவைகளும் இடம் பெறவில்லை.
இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் பாம்புக் கடி தூக்கிட்டு தற்கொலை முயற்சி போன்ற பல நோயாளிகள் வந்தும் அதை நேரடியாக அக்கரைப்பற்று ஆதரவைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இவ்வேளையில் வைத்தியசாலை மீள திறக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல அமைப்புகள் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவிக்கையில் தான்மறுநாளே அங்கு பயணித்து வைத்திய அத்தியட்சகர் போலீசார் மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆகியோரோடு தொடர்பு கொண்டு நிலைமையை தணிக்க முயற்சித்ததாகவும் வைத்திய சாலையை மீளத்திறக்க முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

பின்பு போலீசாரின் பாதுகாப்பு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் பேசி வைத்தியசாலை பாதுகாப்பிற்கு பொலிசாரை அமர்த்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை அரச வைத்தியர்கள் சங்கம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள் .
மாணவனின் மரணம் மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக திருக்கோவில் போலீசார் வலயக்கல்வி அலுவலகம் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் கடந்த ஒரு வாரமாக வைத்திய சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.


எது எப்படி இருப்பினும் இன்றைய தினம்(18) ஒரு முழுமையான கலந்துரையாடல் இடம் பெற்று வைத்தியசாலை திறக்கப்படுவதற்கான சாதகமான அறிகுறி தென்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் அறிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :