பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருமலை இந்து மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை




அஸ்ஹர் இப்றாஹிம்-
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஹரிகரனை கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஓர் இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவித்தது.

கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு க.இரகுநாதன், அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய திரு.சண்முகம் குகதாசன் ஆகியோர் இதனை வழங்கி வைத்தனர்.

திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் பொழுது இந்தக் கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஹரிகரன் தன்வந்தின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :