பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஹரிகரனை கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஓர் இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவித்தது.
கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு க.இரகுநாதன், அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய திரு.சண்முகம் குகதாசன் ஆகியோர் இதனை வழங்கி வைத்தனர்.
திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் பொழுது இந்தக் கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஹரிகரன் தன்வந்தின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment