செங்கலடி மற்றும் கரடியனாறு மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலைய பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனையும்




எம்.எம்.றம்ஸீன்-
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் செங்கலடி மற்றும் கரடியனாறு மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலைய வருடாந்த பிரதேச மட்ட கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு செங்கலடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் வெகு விமரிசையாக (24) நடைபெற்றது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் கலந்து கொண்டார்.
இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், மற்றும் மாவட்ட சிரேஷ்ட தையல் போதனாசிரியை, இதன் உறுப்பினர்கள் என பலரும்
கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :