பிர்லியன்ட் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் வருடாந்த கலை நிகழ்ச்சி



சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் முன்பள்ளி பட்டமளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்றது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு, கடந்த 10 வருடங்களாக இயங்கிவரும் இக்கல்லூரியில் இருந்து 2023ஆம் கல்வியாண்டில் முன்பள்ளி பாடநெறியைப் பூர்த்திசெய்த 120 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு பாடசாலை செல்கின்றனர்.

பாடசாலை பொறுப்பாசிரியை ஏ.சி.சாமிலா பானு தலைமையில் நடைபெற்ற சான்றிதழ், நினைவுச் சின்னம், பதக்கம் அணிவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகளில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.சஹிலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பளர் என்.எம்.ஏ. மலீக், முன்பள்ளிக் கல்விப் பணியக அம்பாறை மாவட்டக் காரியாலய இணைப்பாளர் அஷ்-ஷெய்க். ஐ.எல்.எம்.அனீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல்.நஸார், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.வை.திருப்பதி, திருமதி.என்.எம்.எஸ் ஷிறீன், கல்முனை பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஏ.எம்.ஆயிஷா ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதில் சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றபீக், சாய்ந்தமருது 7 கிராம நிலதாரி என்.எம்.சஜா, சாய்ந்தமருது சிங்கர் ஷோ றூம் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எச்.எம்.ஜிப்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் முன்பள்ளி பாடத்திட்டத்தின் பிரகாரம் தொழிற் திறன் விருத்தி, சுய மற்றும் சமூக விருத்தி, தொடர்பால் விருத்தி, படைப்பாற்றல் மற்றும் நுன்கலை திறன் அத்துடன் பகுப்பாய்வு மற்றும் முரண்பாடுகளைத் தீர்த்தல் திறமை ஆகிய ஐந்து பிரிவுகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தமைக்காக இப்பணியகத்தினால் வழங்கப்பட்ட விஷேட சான்றிதழ்கள் இந்த மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிர்லியன்ட் கல்லூரியின் 10 வருட நிறைவையொட்டி புதிதாக வடிவமைக்கப்பட்ட மாணவர் சீருடை கல்லூரியின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றபீக் மற்றும் செயலாளர் எஸ்.லியாக்கத் அலி ஆகியோரால் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் இக்கல்லூரியின் வளர்ச்சியில் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்துவரும் முகாமைத்துவ குழுவினர், ஆசிரியைகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை நிகழ்வின் விஷேட அம்சமாக அமைந்திருந்தது.































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :