இயேசு போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்



" இயேசு போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். எமது நாட்டில் நிலையான நல்லிணக்கம் - சமத்துவம் மலர அனைவரும் ஒன்றுபட வேண்டும்." - என்று அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்.

அவர் விடுத்துள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
" ஏழைகளையும், எளிய மனத்தோரையும், கைவிடப்பட்டோரையும் ‘‘இறைவனின் பிள்ளைகள் நீங்கள்’’ என்று வாஞ்சையோடு அரவணைத்து மானிட இனம் நல்வழியில் வாழ, புதிய ஏற்பாடுகளை போதித்த இயேசு பெருமான், தன் போதனைகளாலும், வாழ்ந்து காட்டிய நெறிகளாலும், நம் அனைவரின் வணக்கத்திற்குரியவராகத் திகழ்கிறார்.

எனது பார்வையில் இயேசு ஒரு சமூக புரட்சியாளர். மக்கள் மத்தியில் விடுதலையை விதைத்தவர். இயேசு கிறிஸ்து தன் பிறப்பின் ஊடாக கொண்டுவந்த விடுதலையை, மீட்பை அனைவரும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அதுவே உண்மையான மகிழ்ச்சி. ஆகவே இந்த கிறிஸ்மஸ் விழாவானது துன்பங்கள், துயரங்கள், வறுமை, இயற்கையின் இடர்கள், நோய்கள் அனைத்திலிருந்தும் அனைவருக்கும் விடுதலை தருவதாக அமைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திக்கின்றோம்.

இயேசுவின் கட்டளைகளையும், போதனைகளையும் ஏற்றுக்கொண்டு அமைதியான வழியில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வில் எல்லோருடைய அன்பையும், ஆதரவையும் பெற்று வாழ வேண்டும்.

எமது நாட்டில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் நிலை உருவாக வேண்டும். அதற்காக ஒன்றுபடுவோம். நாட்டின் தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் இருந்து முழுமையாக மீளவும் நாம் ஒன்றுபடுவோம்." - என்றுள்ளது.

ஊடக செயலாளர்
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :