நிந்தவூரில் உள்ள பழக்கடைகள் அனைத்திலும் திடீர் சோதனை நடவடிக்கை



நூறுல் ஹுதா உமர்-
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். றயீஸ் அவர்களின் வழிகாட்டலில் பழக்கடைகளின் தரத்தைப் பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அனைத்து பழக்கடைகளிலும் பரிசோதனை நடவடிக்கை திங்கட்கிழமை மேற் கொள்ளப்பட்டது.

இதில் மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற பழங்கள் மற்றும் செயற்கையாக பழங்களை பழுக்க வைப்பதற்காக பயன்படுத்தகூடிய இரசாயனங்களும் கைப்பற்றப்பட்டு அனைத்தும் அழிக்கப்பட்டன.

இவ்வாறு பழங்களை செயற்கையாக பழுக்கவைக்க பயன்படுத்தப்படும் இரசாயனம் கலந்து தெளிக்கப்பட்ட பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் இரசாயன தாக்கதின் விளைவுகளை அறியாமல் அதனை உட்கொண்டு பல நோய்களுக்குள்ளாகின்றனர்.

எனவே, இதனை தடுக்கும்பொருட்டு இவ்வாறு இரசாயனம் கலந்து தெளிப்பதனையும் இரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தகூடிய உபகரணங்களையும் மற்றும் அழுகிய நிலையில் பழங்களையும் கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துங்கள் என சுகாதார வைத்திய அதிகாரி றயீஸ் தெரிவித்தார்.

இப்பரிசோதனை நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். றயீஸ், மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மற்றும் அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :