08ஏ இலக்க தேயிலை மலையில் இருந்து துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.



பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-

தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக மனைவி பொலிஸாரிடம் வாக்கு ழூலம் .
டுல்சீமை பெருந்தோட்ட நிருவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ
கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலையில்
அமைக்கப்பட்டிருக்கும் அறை ஒன்றில் இருந்து துாக்கில் தொங்கிய நிலையில
ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சடலம் 06.01.2023. வெள்ளிகிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

குறித்த தேயிலைமலைப்பகுதிக்கு தேயிலை கொழுந்து ஏற்ற சென்ற லொரியின் சாரதி ஆண் ஒருவரின் சடலம் துாக்கில் தொங்கிய கொண்டிருந்த நிலையில் சடலத்தை இனங்கண்டு கேர்க்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்ததை அடுத்து தோட்ட நிர்வாகத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்ட்டுள்ளது .சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று மாலை முச்சக்கர வண்டியினை செலுத்துவதற்கு சென்ற நபர் இரவு பத்து மணிவரை வீடு திரும்பவில்லையென பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் உறவினர்கலாள் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 34வயதுடை மூன்று பிள்ளைகளின் தந்தையான அங்கமுத்து கமலதாசன் என அடையாளம் கானப்படடுள்ளதாகவும் நேற்றய தினம் சடலமாக மீட்கப்பட்டவின் தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் கேர்க்கஸ்வோல் தோட்ட நிர்வாகத்தின் உதவி முகாமையாளரினால் விசாரனை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின்
ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலமாக மீடகப்பட்ட நபரின் மனைவி தனது கணவரின் மரணத்தில் சந்தேகம்
எழுந்துள்ளதாக பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து ஹட்டனில் இருந்து
தடைவியல் பொலிஸார் வரவிலைக்கப்பட்டு விசானைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து முச்சக்கர வண்டி, சடலமாக மீட்கப்பட்ட நபரின் காட்சட்டை பையில் இருந்து 3140ருபாய் பணம் கையடக்க தொலைபேசி என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .

மீடகப்பட்ட பட்ட சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு மரண விசாரனைகள் தீடிர் மரண விசாரனையாளர் திருமதி தனலெச்சுமி தலைமையில் முன்னெடுக்கப்பட்டதோடு சம்பவம் தொடர்பில் கேர்க்கஸ்வோல்ட் தோட்ட உதவி முகாமையாளர் உட்பட நான்கு பேரிடம் வாக்குழூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :