மலேசியாவின் தூதுக் குழு கொழும்பு 02இல் உள்ள வேக்கந்தை ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு நல்லிணக்க விஜயம்


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசியாவின் தூதுக் குழு ஒன்று இன்று கொழும்பு 02இல் உள்ள வேக்கந்தை ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு நல்லிணக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பள்ளிவாசலின் நிருவாகத் தலைவர் பஸீர் லத்தீப் வரவேற்றார். இக்குழுவில் மலேசியாவின் மலாக்கா ஆளுநர் கலாநிதி மொஹமட் அலிபின் மொஹமட் ருஸ்டம், மலாக்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அப்துல் ரஸாக்பின் இப்ராஹிம், இலங்கைக்கான மலேசியத் தூதுவராலயத்தின் கவுன்சிலர் மொஹமட் டுமிங், மலாய் சங்கத்தின் இலங்கைத் தலைவர் கலாநிதி அன்வர் உலுமுடீன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர் கலாநிதி மொஹமட் அலிபின் மொஹமட் ருஸ்டம்,  இப்பள்ளிவாசலின் அபிவிருத்திப் பணிகளுக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்வதுடன் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு முதற்கட்டமாக உலர் உணவு வழங்குவதற்கு ஒரு தொகுதி பணத் தொகையையும் வழங்கி வைத்தார். வரவேற்றுபுரையை கலாநிதி வஸீர் எம் லத்தீப் வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :