இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.
சவளக்கடை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.ஜஃபரின் ஏற்பாட்டில் சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.எஸ்.கே.தசநாயக தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது பொதுமக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றதுடன், ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும், சேவையில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment