பொலிஸ் தினத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தினால் பல்வேறு நிகழ்வுகள்





எம்.எம்.ஜபீர்-
லங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

சவளக்கடை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.ஜஃபரின் ஏற்பாட்டில் சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.எஸ்.கே.தசநாயக தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது பொதுமக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றதுடன், ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும், சேவையில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :