சாய்ந்தமருது அல் சுபைதா அமைப்பின் வேண்டுகோளுக்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்தினால் 45 விசேட தேவையுடையோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இன்று (25) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்தினால் வழங்கப்பட்ட 45 விசேட தேவையுடையோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் செயலாளார் ஏ.எம் ஜஹான் தலமையில் இடம் பெற்றது.
இதற்கு பிரதம அதிதியாக அல் சுபைதா அமைப்பினுடைய பிரதான ஆலோசகரும் முன்னால் பிரதேச செயலாளாரும் அரச பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் கெளரவ உறுப்பினருமான ஏ.எல்.எம் சலீம் கலந்து கொண்டதுடன் அமைப்பினுடைய ஏனைய உறுப்பினர்களின் பங்களிப்பில் குறித்த பொருட்கள் பயனாளிகளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment