முன்பள்ளி நிலையங்களில் காலை உணவு வழங்கும் செயற்திட்டம் - 2022



நூருல் ஹுதா உமர்-
களிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் முன்பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் செயற்திட்டமானது தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில், இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட "குறைந்த நிறையைக் கொண்ட சிறுவர்கள் கூடுதல் வீதமானோர் கல்வி பயிலும் பாலர் பாடசாலைகள்" என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 14 முன்பள்ளிகளுக்கு இவ்வருடம் அமைச்சின் அனுசரணையில் காலை உணவு வழங்கும் செயற்திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதேவேளை, மேலதிகமாக Unicef நிறுவனத்தின் அனுசரணையில் மேலதிகமாக 08 முன்பள்ளி நிலையங்களுக்கு காலை உணவு வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வினியோகஸ்த்தர்களை தெரிவு செய்தல், மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கான உணவுச் சுகாதாரம் தொடர்பான செயலமர்வு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முஹம்மட் இம்டாட் இந் நெறிப்படுத்தலில் நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜமீல் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச்செயற்திட்டத்தின் பிரதான விடயங்களான உணவு தயாரிப்பு, உணவுச் சுகாதாரம் தொடர்பான செயலமர்விற்கு வளவாளராக பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜௌஸ் கலந்து கொண்டு ஆலோசனைகள், வழிகாட்டல்களையும் வழங்கிவைத்தார். இதன்போது மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். முஹம்மட் இர்பான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :