புத்தளம் நுரைச்சோலை 'லக் விஜய" அனல் மின்சார நிலையத்தில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து கடலில் வீழ்ந்தபோது இரும்புப் பாலத்தை திருத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளரே கடலில் மூழ்கி உள்ளார். இச்சம்பவம் நேற்றுக் காலை 11:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரும்புப் பாலத்தை திருத்தி, வர்ணம் பூசும் வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆனமடுவ, பள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த,
இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஹேமந்த ஹர்ஷ (32 வயது) என்பவரே கடலில் மூழ்கி காணாமல் போய் உள்ளார்.
இவரோடு திருத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரும்பு பாலம் உடைந்து கீழே விழுந்த போது உடனடியாக செயற்பட்டு அவர்களும் கடலில் பாய்ந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
அத்தோடு இலங்கை கடற்படையினரும், அனல் மின்சாரத்தில் பணிபுரியும் சுழியோடிகளும் இணைந்து இன்று காலை வரை(17/09/2022) தேடும்பணியில் ஈடுபட்ட போதிலும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment