மருதமுனையில் அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைய QR Code முறை மூலம் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை எரிபொருள் நிலையத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய QR Code திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு இன்றைய தினம் (29.07.2022) எரிபொருள் வினியோகிக்கப்பட்டன.

எரிபொருள் உரிமையாளர் அப்துல் அசீஸ் கபீலின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இங்கு வருகை தந்து QR Code முறை மூலம் முதல் தடவையாக பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டர்.

இதேவேளை வாகனங்களின் இறுதி இலக்கங்களுக்கு அமைய கடந்த மூன்று தினங்களாக எரிபொருளை பெற்றுக்கௌ;ளாத பொதுமக்களுக்கும் இ;றைய தினம் எரிபொருள் வழங்கப்பட்டன. இதன் போது மோட்டார் சைக்கில்களுக்கு 1500 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 2000 ரூபாவிற்கும் சொகுசு கார் வாகனங்களுக்கு 7000 ரூபாவிற்கும் எரிபொருள் வழங்கப்பட்டது.

எனினும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் சரியாக பின்பற்றப் படாமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :