வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு இன்று 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற இருக்கின்றது .
இதேவேளை, உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றமும் இன்று ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது.
கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக15 நாட்கள் திருவிழாக்கள் பெரஹரா இடம்பெற்று எதிர்வரும் 12-ஆம் தேதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறும். அதேபோன்று உகந்தை முருகன் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் எதிராவரும் 11-ம் தேதி இடம்பெற இருக்கின்றது.
இது இவ்வாறு இருக்க கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட குழுவினர் உள்ளிட்ட சுமார் 9000 பாதயாத்திரை அடியார்கள் இதுவரை கதிர்காமத்தை சென்றடைந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment