இன்று கதிர்காமம் உகந்தை ஆடி வேல் விழா கொடியேற்றம்.



காரைதீவு சகா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு இன்று 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற இருக்கின்றது .
இதேவேளை, உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றமும் இன்று ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது.
கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக15 நாட்கள் திருவிழாக்கள் பெரஹரா இடம்பெற்று எதிர்வரும் 12-ஆம் தேதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறும். அதேபோன்று உகந்தை முருகன் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் எதிராவரும் 11-ம் தேதி இடம்பெற இருக்கின்றது.

இது இவ்வாறு இருக்க கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட குழுவினர் உள்ளிட்ட சுமார் 9000 பாதயாத்திரை அடியார்கள் இதுவரை கதிர்காமத்தை சென்றடைந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :