இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் இயந்திர தொகுதி வழங்கி வைப்பு



பாறுக் ஷிஹான்-
யற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் பெரன்டினா நிறுவனத்தால் கல்முனையில் இயந்திர தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வானது கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றிருந்ததுடன் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் கலந்து கொண்டிருந்தார்.

மூன்று இலட்சம் பெறுமதியான குறித்த இயந்திர தொகுதியின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற இயற்கை பசளையினை சந்தைப்படுத்தும் செயற்பாட்டினையும் குறித்த நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் விவசாய பாடவிதான அலுவலகர் எம்.எஸ்.எம் ஜெனித்கான் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் பி.பிரதிலிபன் ,வியாபார அவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜெயரூபன் இ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :