அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலையும், தற்போதைய பரிமாணமும் - எம்.எஸ்.நபார் அதிபர்

எம்.வை.அமீர் -
பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்தும் அரசின் புதிய திட்டமான 'அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் திட்டம் தொடர்பாக சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நபார் அவர்களிடம் வினவினேன் அதுதொடர்பில் அவர் வழங்கிய தகவல்களை இங்கு தருகிறேன்.

மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாடு கருதி அரசு காலத்துக்குக் காலம் புதிய நடைமுறைகளையும், மாற்றங்களையும் கொண்டு வருவது வழக்கமாகும். இதனடிப்படையில் தற்போதைய நல்லாட்சி அரசினால், இதுவரையுள்ள அரசாங்கங்களிடம் கல்வியியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கல்வித்துறை ஒதுக்கீடுகள் போதாமை எனும் பெரும் குறைபாட்டை நீக்கும் பொருட்டும் கல்வி முறையில் சமவாய்ப்பை சகல மாணவர்களுக்கும் வழங்கும் பொருட்டும் 2016ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் அண்ணளவாக 6மூ ஒதுக்கீட்டை கல்விக்கு வழங்க முயற்சித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கேற்ப பாடசாலைகளின் சமசந்தர்ப்பத்தை உருவாக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டதே 'அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை'((THE NEAREST SCHOOL IS THE BEST SCHOOL) செயற்திட்டமாகும். இது 2016-2020 வரை 5 வருடங்களில் அமுலாக்கம் செய்யப்பட கொண்டு வரப்பட்டதாகும்.

கல்வியின் வரலாற்றுப் பின்னனி:

ஆரம்பத்தில் 18ம், 19ம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட பாடசாலைகளும், ஆங்கிலேயரின் மிஷனரிப் பாடசாலைகளும், அதற்கடுத்து வந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய சமய அடிப்படையிலான பாடசாலைகளும்(புனித தோமஸ், சென்பீட்டர்ஸ், ஆனந்த,தர்மராஜ, சாஹிறா கல்லூரிகள்) அடிப்படையில்சுதந்திர முன்னோடிகளின் பங்களிப்புகளுடனும் தோன்றியதாகும். 

சுதந்திரத்தின் பின்னர் இப்பாடசாலை அமைப்பானது புதிய மத்திய கல்லூரிகளை உள்ளீர்த்தன. அவை 1946 ம் ஆண்டு கல்விக் கொள்கை மூலமாக (CWW.கன்னங்கரா கல்வி அமைச்சரினது) இவ்வாறு நாட்டின் நகரங்களுக்கு மேலதிகமாக 54 மத்திய கல்லூரிகள் அமைக்கப்பட்டன. மீண்டும் 1961ம் ஆண்டில் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள் உருவாகின. இக்காலப்பகுதியில் அநேக பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. இதற்கு சுவீகரிக்கும் சட்டம் உதவியது. எனினும் இதுவரையும் அரசிடம் கையளிக்கப்படாத தனியார் பாடசாலைகளாக 71 பாடசாலைகள் காணப்படுகின்றன.

இதனைத்தொடர்ந்து ஒரு தசாப்தத்த்pன் பின் கல்வியமைச்சர்.ஈரியக் கொல்லவின் கொள்கையாக (1970களில்) நாடு பூராகவும் நகரங்கள் சார்ந்தபாடசாலைகளாக சில உருவாக்கப்பட்டன.(DS.சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்ற பாடசாலைகள்).

மீண்டும் தற்போதைய பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக காணப்பட்டபோது உருவாக்கப்பட்ட செயற்திட்டங்களும் கல்வியில் சமவாய்ப்பையும், சமசந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தியதை குறிப்பிட முடியும்.

ஒரே வடிவான 3மாடி விஞ்ஞான ஆய்வு கூடங்கள்.
கல்வியியற் கல்லூரிகள்.
கல்வி நிருவாக சேவை புனருத்தானம்.

இவ்வாறு பல்வேறுபட்ட சமய, அரசியல், சமூக விடயங்களை அடியொற்றிதோன்றிய பாடசாலைகளுக்குள் புதிய பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

அரசினால் பொறுப்பேற்கப்பட்ட நகர கேந்திரப் பாடசாலைகள்.
அரசினால் பொறுப்பேற்கப்படாத பாடசாலைகள்.

பௌதீக மற்றும் மானிட வளங்கள் ஊடாக அதி உயர்வான நிலையை அடைந்ததுடன், இதனால் பெற்றோர்களின் மிகவும் நேசிக்கப்பட்ட பாடசாலைகளாகவும் மாற்றம் பெற்றன. 

ஒரு தசாப்தத்தின் பின் மீண்டும் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட பிரதேசங்களில் (1980 களில்) சர்வதேச பாடசாலைகள் இச்சமூகத்திற்கு கவர்ச்சியை வழங்கப் புறப்பட்டன. இதற்கான வர்த்தகப் பதிவுச் சான்றிதழ் மூலம் ஆரம்பமான:

சர்வதேசப் பாடசாலைகள்
அதிசிறந்த தனியார் பாடசாலைகள்
அரச பாடசாலைகள் போன்றன கொழும்பில் கட்டியெழுப்பப்பட்டன.

புதிய திட்டத்தின் பின்னனி:

இதனால் 2015 ஆம் ஆண்டில் (2015.01.08) ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசு இதுவரை தீர்க்கப்படாதிருந்த மேலுள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து இதன் இறுதி விளைவாக முன்வைத்த புதிய தீர்வாக சகல மாணவர்களுக்கும், பிரதேச வேறுபாடின்றி கல்வியில் சமவாய்ப்பை வழங்கும் நோக்குடன் முன்மொழியப்பட்டதே 'அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்பதாகும்.

இத்திட்டத்தின் மூலம் எதிரபார்க்கப்படும் பிரதான நன்மைகளாவன:
அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சமசந்தர்ப்பத்தை வழங்கல், சமவளங்களை வழங்குதல்.

ஒரு பிரதேச செயலாளர் மட்டத்தில் சம்பூரணமான வளமுள்ள பாடசாலைகள் இரண்டை விருத்தி செய்தல்.

சகல வளங்களும் பொருந்திய பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள முடியாமல் போகும் பெற்றோர்களின் விரக்தியை தணித்தல்.

பிரபல்யமான பாடசாலைகளின் நெருக்கடியை குறைப்பதற்கு உதவுதல்.

பெரும்பாலும் அனைத்துப் பாடசாலைகளையும் சிறப்புப் பாடசாலைகளாக மீள அமைத்தல்.

அப்பாடசாலைகளில் உயர்தரப் பாடவிதானம் ஐந்தினை ஆரம்பித்தல். (கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம்).

6ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட வகுப்புக்களில் சிங்கள மொழிக்கு மேலதிகமாக ஆங்கிலம், தமிழ் மொழிகளையும் கற்பித்தல்.

குறைந்த பட்சம் விளையாட்டு, இணைப்பாடவிதான செயற்பாடுகள் 20ஐ உருவாக்கல்.

நவீன தகவல் தொழில்நுட்ப அனுகுமுறையை கல்வி செயன்முறைக்கு அறிமுகப்படுத்தி கல்வியில் தரவிருத்தி ஏற்படுத்துவதற்காக புதிய திட்டத்தின் (Nearest School is the Best School ) படி பாடசாலை அதிபர், ஆசிரியர் என்பன மீள் சொல்லுருவாக்கத்திற்குட்படுத்தப்படவுள்ளன. 

அவை:
  1. Standard,Smart School and Premium Smart School (One in every Education Zone)
  2. Smart Teachers
  3. Smart Principals   

இவ்விரண்டும் கட்டம் கட்டமான தேசிய சர்வதேச பயிற்சிகள் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளன.

பௌதீக வளத்தைப் பொறுத்தவரை Smart School இன் கீழ்:
சிறந்த பாடசாலை அலுவலகம்
நூலகம்
மதிப்பீட்டுப் பிரிவு நவீனமயப்படுத்துதல் மற்றும் ஆய்வு பிரிவுகளை உள்ளடக்கிய நிருவாக அலகினைக் கொண்ட நவீன மூன்று மாடிக் கட்டிடத் தொகுதி.
விஞ்ஞான ஆய்வுகூடம்.
கேட்போர் கூடம்.
உணவகம்.
அதிபர் விடுதி.
ஆசிரியர் விடுதி.
விளையாட்டு மைதானம்.
வலைப்பந்தாட்ட, கூடைப்பந்தாட்ட, மென்பந்து அரங்குகள்.
வலயத்திற்கு ஒன்றாக நீச்சற் தடாகம் அமைத்தல் போன்றவையாகும்.

இதன்படி ஆரம்பத்தில் பிரதேச செயலக பிரிவுகளுக்கு 2 வீதம் 600 பாடசாலைகளே உருவாகக்ப்படும் என்று கூறப்பட்டு திட்ட வரைபுகள் , 

முன்திட்டம் என்பன தீட்டப்பட்டன. ஆனால் அது தற்போது:
அரசியல் அழுத்தம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம்
பிரதேச சிறு தலைவர்களின் தலையீடுகள்
சிறுபான்மைக் கட்சிகளினை திருப்திப்படுத்த தோன்றும் மனவலைகள்
போன்றன காரனமாக வேறு பரிமாணம் பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் புதிய பரிமாணங்கள்: 

இவை போன்றவை காரனமாக இதன் எண்ணிக்கை தற்போது தேசிய ரீதியில் பல்வேறு பிரமானங்களின் படி 6058 ஆக அதிகரித்துள்ளதே அதன் புதிய பரிமாணமாகும். இதன்படி ஏற்கனவே தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை (600) விட ஒரு மாகாணம் பெறும் பாடசாலைகளின் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எண்ணிக்கை அதிகமாகும். 

(உஃம்: கிழக்கு மகாகாணத்தில் உள்ள 17 வலயங்களிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை இதனை விட மிக அதிகமாகும். (708).

இப்பாடசாலைகள் 6058 உம், நான்கு பிரிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

அவை:
A
B
C
D
உஃம்: கிழக்குமகாகாணத்தில் A-65 பாடசாலைகளும், B-116 பாடசாலைகளும், C –84 பாடசாலைகளும் D-443 பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

Aவகை தெரிவுக்குள் அடங்குவதற்கான பிரமானங்கள்:
1AB, 1C, Type –II, Type-III ஆகிய நான்கு வகை பாடசாலைகளிலும் தெரிவுக்குட்படுத்தப்பட்டு தேர்வானவைகள்.

300-3000 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்.

செயற்படுத்தப்படும் திட்டங்கள்:

1ம் கட்டத்தில் கட்டடங்களே வழங்கப்படவுள்ளன.
அடுத்து 10 கணிணிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு முழுப்பொறுப்பும் அதிபர்களே ஆகும்.

இக்கணிணிகளுக்கு மேலதிகமாக இலவச இணைய (Internet Connection) வசதிகளும் கிடைக்கவுள்ளன.

மேற்படி வளங்களை உச்ச அளவில் வினைத்திறனாக பயன்படுத்தல் அவசியமாக்கப்பட்டுள்ளது. காரணம் கடந்த சில தசாப்தங்களாக இவ்வாறு வழங்கப்பட்டு வரும் வளங்கள் முறையான பாதுகாப்பான பேனுகை என்ற அடிப்படையில் அதிபர்களால் அறைகளுக்குள், அலுமாரிகளுக்குள், ஆய்வுகூடங்களுக்குள் பூட்டிவைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் நேரடியாகக் கண்டறியப்பட்டமையாலாகும்.

B வகை தெரிவுப் பிரமாணங்கள்:
மாணவர்கள் 300-3000 வரையுள்ள பாடசாலைகள்
பாடசாலை வகையில் 1AB, 1C பாடசாலைகளான GCE (A/L) பிரிவுகளைக் கொண்டதாகும். இது சிலவேளை தரம் 1-13 ஆகவோ, 6-13 ஆகவோ காணப்படலாம்.

இப்பாடசாலைக்கான வள ஒதுக்கீடுகள்:

இவை GCE (A/L) பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கான கட்டடங்களும், இணைப்பாடவிதானச் செயற்பாட்டறைகளும் ஆளணி வள மேம்பாடுகளும் என கூறப்பட்டுள்ளது.
இதில் உள்ளடங்குபவையாக கிழக்கு மாகாணத்தில் 116 பாடசாலைகள் உள்ளன.

C வகை தெரிவுப் பிரமானங்கள்: 
இது அநேகமாக 1000 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளாகவுள்ளன.
இதில் பாடசாலை வகுப்பை பொறுத்தவரை 6-13 வரையுள்ள வகுப்புக்களை கொண்ட பாடசாலையாகும்.
இதில் GCE (A/L) இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர் தொகை 300-3000 வரையுள்ள பாடசாலையாகும்.

மேலுள்ளB,C ஆகிய பாடசாலைகளில் GCE (A/L) பிரிவு கட்டாயம் என்பதனால் சிலவேளை இப்பிரிவுக்குள் GCE (A/L) பகுதி இல்லாத பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தால் அப்பாடசாலைகளின் அதிபர்கள் ZDE, PDE ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு தற்போது நடாத்தப்பட்டு வரும் இது தொடர்பான அதிபர்களுக்கான கூட்டங்களில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

D வகை தெரிவுப் பிரமானங்கள்:
இவை 5000 பாடசாலைகளில் உள்ள ஊட்டற் பாடசாலைகளாகவுள்ளன.
இதில் பாடசாலைப் பிரிவு  Type-III ஆகவும்
வகுப்புக்கள் தரம் 1-5 வரையுள்ள வகுப்புக்கள் உள்ள பாடசாலையாகும்.

சிலவேளை இதில் தரம் 6 தற்போது நடாத்தப்பட்டாலோ அல்லது இப்பிரிவுக்குள் உள்ளடக்கப்படாமல் போன Type-III பாடசாலைகள் காணப்பட்டாலோ அவர்களின் அதிபர்கள் உடன் ZDE,PDE அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

மேலும் இந்நான்கு வகைப் பாடசாலைகளுக்கும் ஒதுக்கப்படும் வளங்கள் மேலுள்ளவாறு சாதாரணமாகக் கூறப்பட்டாலும், அவற்றின் விபரங்கள் பிரிவுகளாக பின்வருமாறு விரிவாகக் கூறப்படுகின்றது.

பிரிவு Iஇல் - பிரிவு Bவகை, Dவகை பாடசாலைகள் பெறத்தக்க வளங்கள் எனவும்
பிரிவு IIஇல் - பிரிவு Aவகை, Cவகை பாடசாலைகள் பெறத்தக்க வளங்கள் எனவும்
பிரிவு IIIஇல் -பிரிவு Aவகை, Bவகை பாடசாலைகள் பெறத்தக்க வளங்கள் எனவும்
பிரிவு IV- பிரிவு Bவகை பாடசாலைகள் பெறத்தக்க வளங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரிவு 1 இல் டீஇனு வகை பாடசாலைகள் பெறத்தக்க வளங்கள்:

ஆரம்ப கற்றல் வள நிலையம்
வாசிப்பு அறை 
செயற்பாட்டு அறை 
ஆலோசனை அறை
அதிபர் காரியாலயம் 

இதன் கட்டடங்கள் 75'X35' ஆகவும் 

இதன் கட்டடங்கள் இருமாடி  ஆகவும் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளதுடன் இதன் நிபந்தனைகளாக:

ஒரு கட்டடத்திற்கு அருகில் நிருமானிக்கும் போது 10அடி இடைவெளி இருத்தல் வேண்டும்.

புதியதொரு கட்டடம் கட்டும் போது பாவனைக்குதவும் கட்டடங்கள் இடிக்கப்படக்கூடாது.

எவ்வாறிருந்த போதிலும், இதன் செயற்பாடுகள் 'வந்தது இருந்ததையும் கெடுத்தது' என்ற முது மொழிக்கு மாற்றமாக அமைந்தால் வசதியாகும் என அதிபர்களினால் அடிக்கடி பேசப்படுகின்றது. ஆகவே, விரைவாக ஏதாவது நடைபெற்றால் இது உண்மையில் 'அண்மையிலுள்ள வளம் நல்ல வளம்' ஆக முடியும் என்பது எமது பாரிய எதிர்பார்ப்பாகும். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -