நத்தார் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக, கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை சர்வமதத் தலைவர்கள் (25) சந்தித்தனர்



மினுவாங்கொடை நிருபர்-
த்தார் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சகோதர மக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக, கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை சர்வமதத் தலைவர்கள் (25) சந்தித்தனர்.

இதன்போது, பௌத்தம், ஹிந்து மற்றும் இஸ்லாம் ஆகிய சர்வமதத் தலைவர்கள், தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், சப்ரகமுவ பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் கௌரவ கும்புருகமுவே வஜிர நாயக்க தேரர், கௌரவ கட்டுகஸ்தொட்ட உபரதன நாயக்க தேரர், சிவ ஸ்ரீ சுப்பிரமணியம் குருக்கள், அல் - ஹாஜ் அஸ் - ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல் - காதிரி மற்றும் சர்வமதக் கூட்டமைப்பின் தேசிய இனைப்பாளர் அல் - ஹாஜ் முஹியிதீன் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :