நேற்று (04) காலை வெலிசற பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்துச் சம்பவத்தின் மற்றுமொரு சி.சி.ரி.வி. காணொளி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவன் மற்றும் இச்சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக, மஹபாகே பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில்,
ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசற பொது மயானத்துக்கு அருகில், நேற்று (04) காலை 9 மணியளவில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு திசையில் பயணித்த குறித்த அதி சொகுசு வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டும் விலகி எதிர்த் திசையில் பயணித்த மோட்டர் வாகனம், முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாலேயே, இவ்விபத்து இடம் பெற்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
16 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு குறித்த அதி சொகுசு வாகனத்தைச் செலுத்தியதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மஹபாகே பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டினர்.
0 comments :
Post a Comment