இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதான நூலகத்தின் ஏற்பாட்டில் முப்பெரும் விழா நூலக கூட்ட மண்டபத்தில் நூலகர் எம்.எம்.றிபாய்தீன் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இந்த நிகழ்வின்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்ட உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் பல்கலைக்கழக பிரதான நூலகத்தில் உதவிப் பதிவாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. பி.முருகவேல் அவர்களின் வேவை நலன் பாராட்டும் மற்றும் இங்கு உதவி நூலகராக கடமையாற்றி பேராதனை பல்கலைக்ககழகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் திரு.வீ.ஈ.எஸ்.பண்டார அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதில் விஷேட அம்சமாக பிரதான நூலகத்திற்கு தனியான ஒன்றுகூடல் மண்டபம் இந்த நிகழ்வின் பிரதம அதிதி உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வைபவத்தில் உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ், உதவிப் பதிவாளர் பி.முருகவேல், உதவி நூலகர் வீ.ஈ.எஸ்.பண்டார ஆகியோர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக 25 ஆவது வருட நிறைவினை சிறப்பிக்கும் வெள்ளி விழா நிகழ்வுக்கு நூலகத்தின் சார்பில் பங்களிப்புச் செய்த பிரதான நூலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுக் கடிதங்கள் வழங்கியும் வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட், கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸீல், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா எம்.ஜீ.ஹஸன், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி எம்.எம்.மஸ்றூபா, சிரேஸ்ட உதவி நூலகர் எம்.சி.எம்.அஸ்ஹர், சிரேஸ்ட உதவி நூலகர் ஏ.எம்.நஹ்பீஸ், வேலைப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பசீல், கியூரேட்டர் ஏ.சம்ஸார், உதவி நூலகர் எஸ்.எல்.எம்.சஜீர் உட்பட நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment