நாவிதன்வெளியில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணி



எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று இடம்பெற்றது.

வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம், சொறிக்கல்முனை ஹொலிக்குரோஸ் மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரீ.வினோதினி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இதுவரைக்கும் தடுப்பூசியை பெறாத 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் கொவிட் -19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டது.

தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்வதைக் காணமுடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :