காணாமல் போன பொலிஸ் சார்ஜனை விரைந்து கண்டு பிடியுங்கள் - இரமச்சந்திரன்



ம்பளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ள பொலிஸ் சார்ஜன் சுப்பையா இளங்கோவனை உடனடியாக தேடி கண்டுபிடிக்க பொலிஸ்மா அதிபரும் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயாவை சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் சார்ஜன் சுப்பையா இளங்கோவன் திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை மாவட்ட வைத்தியசாலைலையில் கடந்த 08 ஆம் திகதி காலை அனுமதிக்கப்பட்டார் எனினும் அன்றைய தினமே வைத்தியசாலையிலிருந்து காணமல் போயுள்ளதாக வைத்தியசாலையிலிருந்து உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன் பின்னர் குடும்பத்தினரின் முறைப்பாட்டுக்கு அமைய கம்பளை மற்றும் கொத்மலை பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ள போதிலும் இதுவரையில் கண்டு பிடிக்கவில்லை

இவ்வாறன நிலையிலேயே பிரதேசபை உறுப்பினர் இராமச்சந்திரன் இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...

கடந்த 08 ஆம் திகதி காணாமல் போன பொலிஸ் சார்ஜன் 33 வருடமாக பொலிஸ் சேவையில் ஈடுபட்டு வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இளங்கோவன் கம்பளை மாவட்ட வைத்தியசாலையிலிருந்து கடந்த 08 ஆம் திகதி காணாமல் போய் இன்றோடு எட்டு நாட்களாகியும் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை காணாமல் போன பொலிஸ் அதிகாரிக்கான முழு பொருப்பையும் கம்பளை வைத்தியசாலையே ஏற்க வேண்டும்.


மேலும் காணாமல் போன பொலிஸ் சார்ஜன் இளக்ககோவனை விரைவாக தேடி கண்டுபிடித்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இலங்கை பொலிஸ் மா அதிபரும் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :