நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயாவை சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் சார்ஜன் சுப்பையா இளங்கோவன் திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை மாவட்ட வைத்தியசாலைலையில் கடந்த 08 ஆம் திகதி காலை அனுமதிக்கப்பட்டார் எனினும் அன்றைய தினமே வைத்தியசாலையிலிருந்து காணமல் போயுள்ளதாக வைத்தியசாலையிலிருந்து உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
அதன் பின்னர் குடும்பத்தினரின் முறைப்பாட்டுக்கு அமைய கம்பளை மற்றும் கொத்மலை பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ள போதிலும் இதுவரையில் கண்டு பிடிக்கவில்லை
இவ்வாறன நிலையிலேயே பிரதேசபை உறுப்பினர் இராமச்சந்திரன் இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...
கடந்த 08 ஆம் திகதி காணாமல் போன பொலிஸ் சார்ஜன் 33 வருடமாக பொலிஸ் சேவையில் ஈடுபட்டு வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இளங்கோவன் கம்பளை மாவட்ட வைத்தியசாலையிலிருந்து கடந்த 08 ஆம் திகதி காணாமல் போய் இன்றோடு எட்டு நாட்களாகியும் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை காணாமல் போன பொலிஸ் அதிகாரிக்கான முழு பொருப்பையும் கம்பளை வைத்தியசாலையே ஏற்க வேண்டும்.
மேலும் காணாமல் போன பொலிஸ் சார்ஜன் இளக்ககோவனை விரைவாக தேடி கண்டுபிடித்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இலங்கை பொலிஸ் மா அதிபரும் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment