களுதாவளையில் ஒன்றரைகோடி ருபா செலவில் கார்ப்பட் வீதி! கொவிட்டுக்கு மத்தியில் மாத்தளை மேயர் பிரகாஷின் அதிரடி.



காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா-
மாத்தளை மாநகர எல்லைக்குட்பட்ட களுதாவளை ஆற்றங்கரை வீதி பாதை காப்பட் செப்பனிடும் பணி நேற்று ஆரம்பிக்கப்படடது. இவ்வீதியமைப்புப்பணியின் அங்குரார்ப்பணநிகழ்வு நேற்று சுகாதாரமுறைப்படி சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.
மாத்தளை மாநகரசபை மேயர் சந்தனம் பிரகாஷ் இவ்வீதியமைப்புப்பணியின் அங்குரார்ப்பணநிகழ்வில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டார். மாநகரசபையின் ஒன்றரைகோடி ருபா செலவிலானஇவ்வீதியமைப்புபணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

களுதாவளை வரலாற்றில் முதல்தடவையாக ஒரு கார்ப்பட் வீதியாகக்கருதப்படும் இப்பணி சமயஆசாரங்களுடன் விசேடபூஜையுடன் ஆரம்பமாகியது.
கொவிட் தாக்கத்திற்கு மத்தியிலும் இத்தகைய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்து சமுகஆர்வலர்கள் மேயர் பிரகாஷிற்கு பாராட்டுத்தெரிவித்துவருகின்றனர்.
அத்தருணம் மாத்தளை மாநகரசபை முதல்வர் மேயர் சந்தனம் பிரகாஷ் உறுப்பினர் த.மோகன் உள்ளிட்டோரும் தொடர்ச்சியாக இச்செயற்றிட்டத்தை ஊக்குவித்துவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :