பிள்ளையானின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததானம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தனின் 46வது பிறந்த நாளை முன்னிட்டு இரத்தான நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில்; மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்; அங்கத்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானத்தினை வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் நிரோசன் லோரன்ஸ் தலைமையிலான வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தம் பற்றாக்குறையாக காணப்படும் நிலையில் சுகாதார விதிமுறைக்கமைய இரத்த தானத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டதாக வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :