சௌபாக்கியா வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
னாதிபதியின் வீடு இல்லாதோருக்கு வீடு வழங்கும் சௌபாக்கியா விசேட விடமைப்புத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா விசேட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் ஆறு வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி சமுக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சாஜகான், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை, மாஞ்சோலை, ஓட்டமாவடி ஆகிய பகுதியில் ஐந்து வீடுகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி உதவியும், மக்களின் மேலதிக நிதி பங்களிப்பு மூலமும், காகிதநகர் பகுதியில் ஒரு வீட்டுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஆறு இலட்சம் ரூபாய் நிதி உதவியும், பயனாளியின் நான்கு இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பு மூலமும் ஆறு வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :