வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டங்களின் செல்லுபடித்தன்மை பற்றி UGC உறுதிப்படுத்தாது.



அஸ்லம் எஸ்.மௌலானா-
வெளிநாட்டு பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டங்களின் செல்லுபடித்தன்மை பற்றி இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) எவ்வித உறுதிப்படுத்தலையும் வழங்காது என தகவலறியும் சட்டத்திற்கமைய தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பை தொடர விரும்பும் இலங்கை மாணவர்கள், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ள முடியும். இதன்போது சர்வதேச மற்றும் பொதுநலவாய மட்டத்தில் செயற்படும் பல்கலைக் கழகங்களின் விபரங்கள் உறுதிப்படுத்தப்படும்.

எவ்வாறாயினும் அப்பல்கலைங்களினால் வழங்கப்படும் படங்களின் செல்லுபடித்தன்மை பற்றிய உறுதிப்படுத்தல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்க மாட்டாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வெளிநாட்டு பல்கலைகழகங்களால் வழங்கப்படும் சகல பட்டங்களும் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை என்பதை ஊகிக்க முடிகிறது என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :