ஏ.பி.அப்துல் கபூர்-
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்தில் உள்ள சாய்ந்தமருது மழ் ஹருஸ் ஸம்ஸ் மகாவித்தியாலயம் அண்மையில் அரசாங்கத்தின் 1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு தேசிய பாடசாலையாக தரம் உயர்வு பெற்றுள்ளது என அப்பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம். எஸ். எம். ஐ. மதனி தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் புதிய இத்திட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து இத்திட்டத்தினுள் தெரிவுசெய்யப்பட்ட முதன்மையான பாடசாலையாக இப்பாடசாலை திகழ்கின்றது. இப்பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கு மிகவும் அர்ப்பணிப்புடனும
அயராத முயற்சியுடனும் செயற்பட்ட முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிசாம் அவர்களுக்கு எமது பாடசாலையின் ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திச் சபை உட்பட இப்பிராந்தியத்தின் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
மேலும் இப்பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் கௌரவ அனுராதா யகம்பத் அவர்களுக்கும்
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும்
பாராளுமன்ற உறுப்பினருமான டப்ளியூ.டி. வீரசிங்க ஆகியோருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.
முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளரின் இச்சேவையினை இப்பிராந்திய மக்கள் ஒருபொழுதும் மறக்கக்கூடாது. இப்பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்வு பெற்று அதன் மூலம் இப்பிராந்தியம் பெருமையடைகிறது. கல்முனை கல்வி வலயத்தில் இத்திட்டத்தில தேசிய பாடசாலைகள் ஆக
உள்வாங்கப்பட்ட 9 தேசிய பாடசாலைகளுக்கு மாண கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் கல்முனை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் புவனேந்திரன் அவர்களின் தலைமையில் கல்முனையில் தேர்தல் தொகுதி எண் பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் றிஸ்வி முஸ்தபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கடிதங்களை வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய பாடசாலைக்கான கடிதத்தினை நிகழ்வின் பிரதம அதீதியிடமிருந்து பாடசாலையின் அதிபர் எம். எஸ். எம். ஐ. மதனி, பிரதி அதிபர் ஏ.எல்.எம். தன்னில் உட்பட பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் எம். எச்.எம். சஹாப் ஆகியோர் பெற்றுக் கொள்வதனை படத்தில் காணலாம்.
0 comments :
Post a Comment