கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுவலகப்பிரிவில் இன்றும் எதிர்வரும் சனிக்கிழமை வரை சைனோ பார்ம் 2வது அலகு தடுப்பூசி ஏற்றல் நிகழ்வு



எம்.ஏ.முகமட்-
கொரோனா வைரஸை கடடுப் படுத்தும் நோக்கில் நாடாளவிய ரீதியில் சைனோ பார்ம் 2வதுஅலகு (டோஸ் ) தடுப்பூசி மருந்தேற்றல் இடம் பெற்று வருகிறது.கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுலகப் பிரிவில் 2வது நாளாக இன்றும் எதிர்வரும் சனிக்கிழமை வரை முன்னேடுக்கப் படவுள்ளதாக சுகாதார வைத்தியதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.
.
அவர் மேலும் கூறியதாவது இத் தடுப்பூசி ஏற்றும் நிலையஙகளாக அல் அக்ஸா கல்லூரி மற்றும் கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம் ஆகிய இடங்களில் மருந்து ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திலும் , பொது மக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அல் அக்ஸா கல்லூரியிலும் நேற்று இத் தடுப்பூசியினை ஏற்றிக் கொண்டனர்.இன்றும் பொது மக்களுக்கு அதே இடங்களில் இடம் பெற்று வருவதாக அவர் கூறினார்

1வது டோஸ் தடுப்பூசியை 17ஆயிரம் பேர் ஏற்றிக் கொண்டதாகவும் இதுவரை ஏற்றிக் கொள்ளதவர்களுக்கு இன்றும் எதிர் வரும் சனிக்கிழமை வரை இத் தடுப்பூசி ஏற்றப் படவுள்ளதாகவும் சுகாதார வைத்தியதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

கொரோனோவிலிருந்து விடுபட சமூக இடைவெளியை பேணல் ,முகக்கவசம் அணிந்து கொள்ளல்,அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ளல்,வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருத்தல் சுகாதார விதி முறைகளை பேணிக் கொள்மாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :