முன்னாள் அமைச்சர் மன்சூருக்காக கல்முனையில் துஆ பிராத்தனை !



நூருல் ஹுதா உமர்-
ல்முனையை செதுக்கிய சிற்பி என போற்றப்படும் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூரின் நாலாவது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும், நினைவுரையும் இன்று (23) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து கல்முனை மக்களின் ஏற்பாட்டில் கல்முனை முஹையத்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

மௌலவி அஸ்ஸெக் டீ .ஆர். நௌபர் அமீன் (வாஹிதி) அவர்கள் கடந்த காலங்களில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்கள் இனங்களுக்கிடையிலான உறவுப்பாலமாகவும் அபிவிருத்திகள் செய்வதில் கொண்டிருந்த உத்வேகம் தொடர்பிலும் உரை நிகழ்த்தியதுடன் முன்னாள் அமைச்சருக்காக துஆ பிராத்தனையும் நிகழ்த்தினார். இதன் போது கொரோனா அலையிலிருந்து நாடு விடுபடவும், கொரோனா தடுப்பில் ஈடுபடும் சகல தரப்பினருக்கும் அருள் வேண்டியும் பிராத்தனையில் ஈடுபட்டார்.

கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர் உட்பட கல்முனை மக்கள் பலரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :