சாய்ந்தமருதில் புதிதாக பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!



எம். என். எம். அப்ராஸ், யூ. கே. காலித்தீன்-
சாய்ந்தமருது பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. பொது மக்களின் இலகு தன்மையை அடப்படையாக கொண்டு நாடு முழுவதும் 197 புதிய பொலிஸ்நிலையங்களை ஸ தாபிக்கும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் எண்ணக்ககருவில் உருவான விசேட திட்டத்தின் கீழ் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால்,அம்பாறைமாவட்டத்தில் சாய்ந்தமருதில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்கபட்டு உத்தியோபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி. ஜெய்ந்த ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் கிழக்கு மாகாண
சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி எல்.கே. டபிள்யூ. கமால் சில்வா பிரதம அதிதியாககலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
இதில் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என். வை. செனவிரத்ன , கல்முனைபிராந்திய பொலிஸ் அத்தியட்ச்சகர் பீ. எம். ஜெயரத்ன, கல்முனை பொலிஸ்நிலையபொறு்பதிகாரி கே. எச். சுஜித் பிரியந்த , கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சி. அன்சார், சாய்ந்தமருது பிரதேசசெயலாளர். ஏ.ஏ. ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதகாரி எஸ். எல். சம்சுதீன் மத தலைவர்கள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதன் போது பொலிஸ் நிலையத்தில் நடுகை இடம்பெற்றதுடன், பொலிஸ் சேவையில் நீண்ட கால அனுபவம் கொண்டவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் அவர்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாய்ந்தமருது பொலிஸ்நிலையத்துக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் .

கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்துக்கு அருகாமையில், அல்ஜலால் மகாவித்தியாலயத்துக்கு முன்பாக குறித்த பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :