கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து மேலும் 4 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்.



எப்.முபாரக்-
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று (18) மேலும் 4 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி சற்று முன்னர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ஏற்கெனவே
தொற்றாளர்களாக அறியப்பட்டவர்களின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் 60 பேர் இன்று அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் இந்த 4 நபர்களும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்ட அதேவேளை 56 நபர்களுக்கு எதிர்மறையை ( Negative) காட்டியது. இந்த நிலையில், இவர்களில் ஏற்கெனவே தொற்றாளர்களின் முதல் நிலை தொடர்பாளர்கள் 6 நபர்களின் இரத்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த 2வது கொரோனா அலைக்குப் பின்னர் மொத்தமாக 76 நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :