சௌபாக்கிய வீட்டுத்திட்டம் : நோர்வூட் சமூத்தி வங்கி அதிகாரப்பகுதியில் இரண்டு வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட நோர்வூட் சமூர்த்தி வங்கியின் அதிகார பகுதிக்குட்பட்ட ஒல்டன் வட்டாரம், பிரவுன்லோ வட்டாரத்திலே இரண்டு வீடுகள் நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பாட்டது.
சௌபாக்யா வீடமைப்பு வேலை திட்டத்தின் கீழ் தலா இரண்டு லட்சம் பெருமதியான மேற்படி இரண்டு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டது.
நோர்வூட் சமுர்த்தி வங்கி முகாமையாளர் வின்சென்ட் ஜயபிரகாஸ் தலைமையில் பயனாளிகளுக்கு கையளிக்கும் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் மஸ்கெலியா பிரதேசசபை தலைவர் ஆர்.சென்பகவள்ளி,பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக், கள உதவி முகாமையாளர் சு.புவனேஸ்வரன், சமுர்த்தி உத்தியோகஸ்தர்களான எ.தேவிகா , ஜி.திவாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment