அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிராக, அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து விரைவில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதுகுறித்து ஊடகங்களுக்கு இன்றைய தினம் தெளிவுபடுத்தினார்.
20ஆவது திருத்த யோசனையில் பல பயங்கரமான விடயங்கள் உள்ளன. அதில் பிரதான ஒன்றுதான் நீதிபதிகள் நியமித்தல் மற்றும் கணக்காய்வுகளுக்கு ஒருசில நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளை சேர்க்காமை. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும். ஒட்டுமொத்தமாக இந்தத் திருத்தத்திற்கெதிராக விரைவில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டங்களை நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment