ஆட்டோ - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கொழும்பு பிரதான வீதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் சனிக்கிழமை 3 ம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை அதன் சாரதி பிரதான வீதிக்கு எடுக்கும் போது பிரதான வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆட்டோவுடன் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment