வாழைச்சேனை - நாவலடி பிரதான வீதியில் விபத்து ..

எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டோ - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கொழும்பு பிரதான வீதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் சனிக்கிழமை 3 ம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை அதன் சாரதி பிரதான வீதிக்கு எடுக்கும் போது பிரதான வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆட்டோவுடன் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :