சுனாமியால் காணாமல்போய் 16 வருடங்களில் கண்டு பிடித்த அக்ரம் ரிஸ்கானுக்கு உரிமை கோரிய இன்னுமொரு தாய் -அம்பாறையில் பரபரப்பு

ஜே.எப்.காமிலா பேகம்-
சுனாமி அனர்த்தத்தினால் காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அக்ரம் ரிஸ்கான் என்ற இளைஞனுக்கு இரண்டு தாயார் உரிமை கோரியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் தொலைத்த மனது மகளை தேடித்திரிந்து இறுதியில் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடித்த தாயும், அக்ரம் ரிஸ்கான் என்பவரும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அதேபோல புதிதான தற்சமயம் உரிமைகோரும் தாயாரும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுறது.

அம்பாறை – சம்மாந்துரை பிரதேசத்தைச் சேர்ந்த அபுசாலி சித்தி ஹமாலியா என்கிற பெண், அக்ரம் ரிஸ்கான் சுனாமியின்போது காணாமல் போயிருந்ததாகவும், அவரே தனது மகன் என்றும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அக்ரம் ரிஸ்கான் 5 வயதில் சுனாமி அனர்த்தத்தில் காணாமல் போயிருந்த நிலையில், அவர் 21 வயதுவரை அம்பாறை நகரிலுள்ள சிங்களக் குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றார்.

இதேவேளை, அம்பாறை ஹொல்மன்கல பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைட் நூர் இன்ஸானி என்பவர் அக்ரம் ரிஸ்கான் தனது மகன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் அம்பாறை சம்மாந்துரை பொலிஸ் நிலையத்திற்கு மேற்படி இரு தாயாரையும் பொலிஸார் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இறுதியில் அவர்கள் இருவரையும் அக்ரம் ரிஸ்கானின் மரபணுவுடன் பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :