பாடப் புத்தகங்களை விற்றவர் விசேட அதிரடிப் படையினரால் கைது!


M.I.இர்ஷாத்-


ரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஆயிரத்து 75 பாடப்புத்தகங்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஹவத்தை நகரில் உள்ள பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலேயே இந்த புத்தகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்களுக்காக 2020ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட தமிழ் மொழி மூலப் புத்தகங்களே இவை என தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த புத்தகங்கள் 2019ஆம் ஆண்டு அச்சிடப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விற்பனை நிலைய உரிமையாளர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு கஹவத்த பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :