M.I.இர்ஷாத்-
அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஆயிரத்து 75 பாடப்புத்தகங்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஹவத்தை நகரில் உள்ள பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலேயே இந்த புத்தகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்களுக்காக 2020ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட தமிழ் மொழி மூலப் புத்தகங்களே இவை என தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த புத்தகங்கள் 2019ஆம் ஆண்டு அச்சிடப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விற்பனை நிலைய உரிமையாளர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு கஹவத்த பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment