பயிற்றுவிக்கப்பட்ட பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு...


எஸ்.அஷ்ரப்கான்-


முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சராக இருந்தபோது, அவ்வமைச்சின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட Mini Garment "மினி காமன்ட்" செயற்றிட்டத்தின் மூலமாக பயிற்றுவிக்கப்பட்ட பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (3/9/2020) பொத்துவில் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளரினால் இந்தச் செயற்றிட்டம் பற்றிய தெளிவுரை வழங்கப்பட்டது.

பயிற்சியை நிறைவு செய்த பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்களை கையளித்து, அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள்,

மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தக்கூடிய பேண்தகு அபிவிருத்திகள் தொடர்பாக பயிலுனர்களுக்கு தெளிவு படுத்தினார்.

இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :