தீ விபத்தினால் குடியிருப்பு பாதிப்பு




தலவாக்கலை பி.கேதீஸ்-

லவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்டத்தில் 14.8.2020 காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொழிலாளர் குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகளில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்ததுடன் இந்த வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இத்தீவிபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடைமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. 

இத் தீவிபத்து காரணமாக அத்தியாவசிய ஆவணங்கள் ,உடுதுணிகள், தளபாடங்கள் போன்றன சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும் மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் ஊடாகவும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத் தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :