வாகரை, மாங்கேணி விபத்தில் இருவர் படுகாயம்.

எச்.எம்.எம்.பர்ஸான்-

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து திருகோணமலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி பிரதான வீதியால் செல்லும் போது நாய் ஒன்று குறுக்கறுத்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலத்த காயங்களுடன் வீதியில் வீழ்ந்து கிடந்த போது பிரதேச மக்கள் 1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைத்து அதன் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -