'வழித்தடம்'- All University Muslim Student Association
Sana A Jismy.
South Eastern University of Sri Lanka.
“ பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண்பதற்கான ஓர் ஒழுங்கு முறையான பரிசீலனை ஆய்வு ஆகும் (Burmis)”Sana A Jismy.
South Eastern University of Sri Lanka.
“புதிய அறிவை பெற்றுக்கொள்வதற்கான ஓர் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட ஒரு முயற்சியே ஆய்வு ஆகும்”
என அறிஞர்கள் ஆய்வுக்கு வரைவிலக்கணங்கள் கூறுகின்றனர்.
ஆய்வு என்பது அறிவுத்தேடலுடன் சம்பந்தப்பட்டதாகும். ஆய்வு என்பதை குறிக்கும் ஆங்கில பதம் Research என்பதாகும். Re/cheacher என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லின் வழி வந்ததாக கூறப்படுகிறது.
உண்மையை தேடுதல் மனித இனத்தினதும், ஆர்வம் நிறைந்த மனித மனத்தினதும் சிறப்பான தன்மை ஆகும். அந்த வகையில், மனிதர்களின் மனதில் தோன்றும் சந்தேகங்கள், சமூகப் பிரச்சினைகள் அனைத்திற்கும் சரியான பொருத்தமான தீர்வு ஒன்றை எடுக்க வேண்டுமென்றால் ஆய்வு செய்வதனாலே எடுக்க முடியும்.
ஒரு மாணவன் ஆய்வு பற்றி படிப்பதும், தாயைப் பற்றி தெரிந்து கொள்வதும் பல்கலைக்கழகத்திலே ஆகும். பாடசாலை மாணவனுக்கு ஆய்வு பற்றி போதிய அறிவு இருக்காது. ஆகவே ஒரு மாணவன் பல்கலைக்கழக காலத்தில் ஆய்வு கலாசாரத்தைப் பற்றி படிக்க தவறினால் பிறகு அவனுக்கு ஆய்வு கலாசாரத்தைப் பற்றி படிப்பதற்கு சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கின்றன.
காலம் முன்னேறிக்கொண்டே செல்கிறது. காலம் போகின்ற அதே முன்னேற்றமான பாதையில் மனித சமுதாயமும் முன்னேறிப் போக வேண்டும். அவ்வாறு முன்னேறும்போது பல சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றன. அவற்றிற்கு சரியான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையான தீர்வுகளை இனங்கண்டு அதற்கு பொருத்தமான முறையில் பயணித்தால் மட்டுமே காலம் போகின்ற அதே வேகத்தில் எம்மால் முன்னேறலாம். இல்லாவிடில் அதே இடத்திலிருந்து மற்றவர்களின் சாதனையை கைகட்டி பார்வையிட மட்டுமே முடியும். எல்லா வகையான முன்னேற்றங்களும் ஆராய்ச்சியின் அடியாகவே பிறக்கின்றன.
இன்று இளம் முஸ்லிம் தம்பதிகளின் விவாகரத்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சமூக உறவுகளுக்கிடையில் புரிந்துணர்வு தடைபட்டு காணப்படுகின்றன இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார நிலையை நோக்கினால், ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் தற்காலத்தில் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது. அதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வையே பயன்படுத்த வேண்டும்.
இன்று பல முஸ்லிம் மாணவர்கள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திக் கொள்கின்றனர். பாடசாலையிலிருந்து இடைவிலகுகின்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணராமல் இருக்கின்றனர். சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் முஸ்லிம்களின் கல்விநிலையை நோக்கினால் மற்ற சமூகத்தின் கல்வி நிலையை விட முஸ்லிம்களின் கல்வி நிலை மங்கியதாகவே காணப்படுகின்றன. முஸ்லிம் ஆய்வாளர்களும் குறைவாகவே காணப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வை கண்டறிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இலக்கியவாதிகளை பொருத்தவகையில் அவர்களுடைய படைப்புக்களையும், அவர்களுடைய நடையியல்களையும் விருத்தி செய்து கொள்வதற்கு ஆய்வு உதவுகிறது.
முஸ்லிம் தலைவர்கள் நாட்டிற்கும், முஸ்லிம்களுடைய கல்விக்கும், அரசியலுக்கும் செய்த அளப்பரிய சேவைகளை வரலாற்று ஆய்வு செய்வதன் மூலமாகவே தற்கால மாணவர்களுக்கு அதனை உணர்த்த முடியும்.
இன்று, முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்றுதான் “வறுமை.” ஒவ்வொரு நகரங்களாக பிரித்து ஆய்வு செய்ய வேண்டிய விடயம். பல காரணங்களுக்காக வறுமையை எதிர்நோக்குகின்றனர். வறுமையை தீர்ப்பதற்கு பல தீவுகள் காணப்படுகின்றன. தங்களுக்கு பொருத்தமான தீர்வுகளை பொருத்தமான முறையில் செய்வதற்கு, ஆய்வு செய்ய வேண்டும்.
இன்று, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகவே ஆய்வு காணப்படுகிறது. இவற்றை ஆய்வு செய்து தீர்வு காண்பதற்கு பொருத்தமானவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாகும்.
பல்கலைக்கழக நுழைவு படிக்கின்ற எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை. இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே கிடைக்கின்றன ஆகவே அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சமூகத்தின் மீது பாரிய பொறுப்பு காணப்படுகிறது. சமூகத்தை முன்னேற்றப்பாதையில் பயணிக்க வைத்தது அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் கடமையாகும். பல்கலைக்கழக மாணவர்கள் என்பது சமூகத்தை சீர்திருத்தவந்தவர்கள்.
எமது முஸ்லிம் சமூகத்தை சிறந்த முன்னேற்றமான சமூகமாக மாற்றுவது ஒவ்வொரு முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் மீதும் கடமையாகும். அதனால் ஆய்வின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும், ஆய்வு கலாசாரத்தை ஊக்குவிப்பதும் அவசியமாகும்.
செய்தியாளர்: அfப்ரா அன்சார்-